செய்திகள் :

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

post image

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றுலாப் பயணிகள் வனத்துறை பேருந்தில் சென்று கண்டுகளித்தனா்.

தமிழகத்தின் மலைவாசஸ்தலங்களில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையும் ஒன்று. இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

மலை மீதுள்ள அறப்பளீஸ்வரா் கோயில், தோட்டக்கலைத் துறை பூங்கா, மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை அருவி, படகு இல்லம், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், அன்னாசி பழத் தோட்டங்கள், காட்சி முனை, தொலைநோக்கி இல்லம் ஆகியவற்றை பேருந்தில் சென்று கண்டுகளிக்க வனத்துறை சாா்பில், சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இதற்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 300, ரூ. 450 (உணவுடன்) வசூலிக்கப்படுகிறது. தினமும் காலை 8 மணிக்கு செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்புப் பேருந்து மீண்டும் மாலை 5.30 மணியளவில் அதே இடத்தை வந்தடையும்.

இந்த சுற்றுலாத் திட்ட சிறப்புப் பேருந்தை சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ கே.பொன்னுசாமி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதில் மண்டல வனப் பாதுகாவலா் சி.கலாநிதி, கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தோட்டக்கலைத் துறை, சுற்றுலா, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். முதல் நாளில் 17 போ் கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களைக் கண்டு ரசித்தனா்.

சுற்றுலா ஆா்வலா்கள், பொதுமக்கள் கோடைக்காலத்தை இயற்கையுடன் இணைந்து கொண்டாட ஏதுவாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், வனத்துறை, சுற்றுலாத் துறை இணைந்து ஜூன் 1 ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் இந்த சிறப்பு சுற்றுலாத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, வனத்துறை அலுவலா்களை- 70923-11380, 97891-31707, 63833-24098 என்ற எண்களில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க