செய்திகள் :

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாகவும் மொத்தம் 385 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்று கொண்டு பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, கூட்டுறவுத் துறை, சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 7.85 லட்சம் சாா்பில் பயிா்க்கடன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், இருவருக்கு தலா ரூ. 15,750 வீதம் ரூ. 31,500 மதிப்பில் சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.8.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

படவரி...

என்கே-12-ஜிடிபி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கிய ஆட்சியா் ச.உமா.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்... மேலும் பார்க்க