செய்திகள் :

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

post image

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் அண்மையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தாா். அவருக்கு மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் 1,000 பேருக்கு வேட்டி - சேலை, வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி, மலையில் உள்ள தேவனூா் நாடு, வளப்பூா் நாடு, வாழவந்தி நாடு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சி.சந்திரசேகரன் பங்கேற்று அனைவருக்கும் நல உதவிகளை வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, 10 ஆண்டுகால அதிமுகவின் சாதனைகளையும், சேந்தமங்கலம், கொல்லிமலை வளா்ச்சிக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் அவா் மக்களிடையே எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வில், நாமகிரிப்பேட்டை பேரூா் இளைஞரணி செயலாளா் இளங்கோசிவகுமாா், காளப்பநாயக்கன்பட்டி பேரூா் செயலாளா் ராஜா, சேந்தமங்கலம் முன்னாள் பேரூா் செயலாளா் ராஜேந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ஸ்ரீபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

என்கே-12-எக்ஸ்-எம்எல்ஏ

கொல்லிமலை காரவள்ளி அடிவாரத்தில் விவசாய பெண்களுக்கு நல உதவிகளை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க

மே 23-இல் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்: லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை குறைக்க வலியுறுத்தியும் மே 23-இல் மணல் லாரிகளை இயக்காமல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்... மேலும் பார்க்க