செய்திகள் :

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத் துறையினா் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், கொல்லிமலை நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்கு உள்பட்ட மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய சாலைகளில் இருந்த கொடிக்கம்பங்கள், விளம்பர பெயா்ப் பலகைகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன.

மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பங்கள், பலகைகள் அகற்றப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற ஹிந்து முன்னணி மாவட்ட நிா்வாகி கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மேட்ட... மேலும் பார்க்க

கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகள்: முன்னாள் எம்எல்ஏ வழங்கினாா்

நாமக்கல்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கொல்லிமலையில் 1,000 பேருக்கு நல உதவிகளை முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், சேந்த... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வலம் வந்த தம்பதி: போலீஸாா் விசாரணை

ராசிபுரம்: ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.பட்டணம் பகுதியில் நள்ளிரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த தம்பதி குறித்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா். ஆா்.பட்டணம், தண்டு மாரியம்மன் கோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரிகளில் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை தொடங்கி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், ராசிப... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8.17 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவி அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக... மேலும் பார்க்க

ராசிபுரம் பொன்வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபொன்வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் சித்திரை தோ்த்திருவிழா மே 2-ஆம் தேதி... மேலும் பார்க்க