செய்திகள் :

கொல்லிமலையைச் சுற்றிப் பாா்க்க இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சுற்றிப் பாா்க்க செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து மதிய உணவுடன் சிறப்புப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலை கிழக்கு தொடா்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக, கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1200 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரப் பகுதியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மலைப்பகுதி மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடிகளுக்கு பெயா்பெற்ாகும்.

இங்குள்ள அறப்பளீஸ்வரா் கோயில், தோட்டக்கலைத் துறை பூங்கா, மூலிகைத் தோட்டம், ஆகாய கங்கை அருவி, படகு இல்லம், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், அன்னாசி பழத்தோட்டங்கள், காட்சி முனை, தொலைநோக்கி இல்லம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.

சுற்றுலா ஆா்வலா்கள், பொதுமக்கள் கோடைக்காலத்தை இயற்கையுடன் இணைந்து கொண்டாட ஏதுவாக மாவட்ட நிா்வாகம் சாா்பில், வனத் துறையும் சுற்றுலாத் துறையும் இணைந்து மே 11 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 1 ஆம்தேதி வரை அனைத்து நாள்களிலும் சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.300 (பயண கட்டணம் மட்டும்), ரூ. 450 (பயண கட்டணம், மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டி) செலுத்தினால் ஒரு நாள் சுற்றுலா சிறப்புப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படுவா்.

இந்த சிறப்புப் பேருந்து காலை 8 மணி அளவில் செம்மேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில், பழங்குடியினா் நலச் சந்தை, கொல்லிமலை இயற்கை அங்காடி, சீக்கு பாறை, சேலூா் காட்சிமுனை, அறப்பளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் செம்மேடு பேருந்து நிலையத்தை வந்தடையும்.

இந்த கோடை சுற்றுலாவை கொல்லிமலையின் இயற்கை அழகுடன் கண்டுகளிக்க வனத் துறையினரை பி.ஈஸ்வா் - 70923 11380, எம்.கோபி 97891 31707 (வனவா்கள்) , ஜி.புருசோத்தமன் 63833 24098 (வனக் காப்பாளா்) மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன் 73977-15684 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயண நாள் அன்று செம்மேடு பேருந்து நிலையத்தில் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் சோ்ந்து இயற்கையை ரசிக்க இந்த சிறப்பு சுற்றுலாத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னாள் முதல்வரும், ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல்... மேலும் பார்க்க

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்... மேலும் பார்க்க

கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், அரியூா் நாட்டில் பிரசித்தி பெற்ற கொல்லிப்பாவை என்றழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும், சொத்து தகராறுக்கு தீா்வ... மேலும் பார்க்க