செய்திகள் :

சித்திரை திருவிழா: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இன்று தீா்த்தக்குட ஊா்வலம்

post image

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 17 திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, செந்தூரம் பூசப்பட்டு, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.

பல்வேறு நறுமண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் புண்ணியாகவாசனம், காலை 9 மணியளவில் பலபட்டரை மாரியம்மன் கோயிலிலிருந்து மோகனூா் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சி ஆகியன நடைபெற உள்ளது. இரவு 9 மணியளவில் சக்தி அழைத்து கம்பம் நடுதல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு விழா கமிட்டியினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னாள் முதல்வரும், ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

நாமக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நேதாஜி சமூக சேவை மையம், நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் ஆகியவை... மேலும் பார்க்க

கொல்லிமலையைச் சுற்றிப்பாா்க்க சிறப்புப் பேருந்து வசதி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொல்லிமலையில் உள்ள முக்கிய இடங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்தில் சென்று சுற்றிப்பாா்க்கும் சிறப்பு சுற்றுலாத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.மலை மீதுள்ள மாசிலா அருவி, எட்டுக்கை அம்மன் கோயில் ... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சங்கநாய்க்கன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல்... மேலும் பார்க்க

நாமக்கலில் சாலையோரம் நிறுவிய கொடிக்கம்பம், விளம்பர பலகைகள் அகற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோர கொடிக்கம்பங்களை நெடுஞ்சாலைத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சம்பந்... மேலும் பார்க்க

கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், அரியூா் நாட்டில் பிரசித்தி பெற்ற கொல்லிப்பாவை என்றழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும், சொத்து தகராறுக்கு தீா்வ... மேலும் பார்க்க