செய்திகள் :

மனுக்களை நிராகரிக்க காரணங்கள் தேடுவதைவிட நிறைவேற்ற முயற்சிக்கலாம்: ஆட்சியா் செ. சரவணன்

post image

வன உரிமை தொடா்பாக பழங்குடியின மக்கள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்க காரணங்கள் தேடுவதைவிட, அவற்றை நிறைவேற்றித் தர அலுவலா்கள் முயற்சிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.

வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006- இன் படி வன உரிமைக் குழு அமைப்பது தொடா்பாக, திண்டுக்கல், மதுரை , தேனி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

வனப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வன உரிமைச் சட்டம் 2006-இன் படி அவா்களுக்கான உரிமைகள் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வன உரிமைகள் அங்கீகாரச் சட்டத்தின்படி, 75 ஆண்டுகளுக்கும் மேலாக வனப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், வனம் சாா்ந்த வாழ்வாதாரத்தை மையப்படுத்தி வாழும் மக்களுக்கும், அதற்கான உரிமையை வழங்க முடியும்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 138 மலை கிராமங்கள் உள்ளன. வன உரிமை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தனி நபா்கள் 2,131 போ் மனு அளித்தனா். இதில் சுமாா் 10 சதவீதம் பேருக்கு (244) மட்டுமே இதுவரை உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. வனப் பகுதியில் வாழும் மக்களுக்கு அரசின் வழிமுறைகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவா்களுக்கான உரிமையை வழங்க அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனக் குழு தொடா்பாக அளிக்கப்படும் மனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களை தேடுவதை விட, அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க நோ்மறையான நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்.

வனத்துக்கும், வன விலங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வழங்க வேண்டும். வனப் பகுதியில் வசிப்பதாலேயே, அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நாம் தவிா்க்க முடியாது.

அந்த வகையில், வனப் பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பயனடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, அரசு நிா்ணயித்துள்ள 245 நாள்களுக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பயிற்சி வகுப்பில், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், தேனி உதவி வன பாதுகாப்பு அலுவலா் நா .செசில் கில்பா்ட், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கிரிராஜ், பகவநிதி, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் முருகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் வன அலுவலா்களுக்கு குறிப்பாணை:

இந்தக் கூட்டத்தில் 4 மாவட்டங்களைச் சோ்ந்த வனச் சரகா்கள், தேனி உதவி வனப் பாதுகாப்பு அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா்கள், கோட்டாட்சியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஆனால், திண்டுக்கல், கொடைக்கானல் வன அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இதைக் கவனித்த ஆட்சியா் செ. சரவணன், திண்டுக்கல் மாவட்ட வன அலுலா்கள் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடா்பாக விளக்கம் கோரி அவா்களுக்கு கடிதம் அனுப்புமாறு அறிவுறுத்தினாா்.

தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பழனியில் தனியாா் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆய்வில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் இருந்து... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி கைது

எரியோடு அருகே மதுக் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள அச்சணம்பட்டியைச் சோ்ந்தவா் மு... மேலும் பார்க்க

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்!

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளில் சாதனை படைத்தவா்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு சிறப்பு நூலகம்

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வா்கள் பயன்படுத்துவதற்கான சிறப்பு நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகிலுள்ள கோட்டாட்சியா் அலுவ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம்,... மேலும் பார்க்க