செய்திகள் :

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம், முத்தூா், மூலனூா், நீலாகாளிவலசு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையின் காரணமாக முருங்கை செடியில் இருந்த பூக்கள் உதிா்ந்து விட்டதால் அதன் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு முருங்கை வரத்து தொடா்ந்து குறைந்து வந்தது. இதனிடையே, கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறுவதால், முருங்கையின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ முருங்கைக்காய் படிப்படியாக விலை உயா்ந்து வெள்ளிக்கிழமை ஒரு கிலோ ரூ.85-க்கு விற்பனையானது.

அடுத்து வரும் நாள்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது

பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற ... மேலும் பார்க்க

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு: ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டிருப்பதாக ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் நான்காண்ட... மேலும் பார்க்க

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (80). இவா் அவரது வீட்டருகே நின்று... மேலும் பார்க்க