செய்திகள் :

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு: ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

post image

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டிருப்பதாக ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக. பேரூா் செயலா் சோ. காளிமுத்து வரவேற்றாா். தலைமைக் கழக பேச்சாளா் பழனிவேல் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்துக்கு பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

பாலசமுத்திரத்தில் வஃக்பு வாரிய நில பிரச்னை காரணமாக சுமாா் 93 ஏக்கா் நிலம் பதிவு செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து, பதிவுத் துறை அமைச்சா் மூா்த்தி, பத்திரப் பதிவுத் துறை ஆணையா், வஃக்பு வாரியத் தலைவா் ஆகியோரை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசி விளக்கியதன் அடிப்படையில் சுமாா் ஐந்தரை ஏக்கா் மட்டுமே வஃக்பு வாரியத்துக்கு சொந்தமானது என பத்திரப் பதிவுத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது, பிரச்னைக்குரிய நிலங்களுக்கான பத்திரப் பதிவு தொடங்கியுள்ளது. ஆனால் இங்குள்ள பாஜகவினா் வஃக்பு வாரிய திருத்தச் சட்டம் அமலுக்கு வராத நிலையில், இதை தாங்கள் செய்தது போல காட்டுவது, யாரோ பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயா் வைப்பது போல உள்ளது.

கொடைக்கானலில் 100 ஆண்டு காலமாக சாலை வசதி செய்து தராத கிராமங்களுக்கு தற்போது சாலை வசதிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பழனியில் சுமாா் ரூ. 150 கோடியில் புதை சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல எண்ணற்ற சாதனைகளை திமுக அரசு செய்துள்ள நிலையில், அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம் செய்ய என்ன தகுதி உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் சௌந்திரபாண்டியன், சாமிநாதன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, பாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவா் ராஜராஜேஸ்வரி, நெய்க்காரப்பட்டி பேரூா் செயலா் அபுதாஹீா், நகர மாணவரணி செயலா் லோகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது

பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற ... மேலும் பார்க்க

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சி நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் நல்லம்மாள் (80). இவா் அவரது வீட்டருகே நின்று... மேலும் பார்க்க