செய்திகள் :

India Pakistan : `பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று விமானத் தளங்களில் இந்தியா தாக்குதல்?’ - பிபிசி தகவல்

post image

இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் மற்றும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக, பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி,

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "இந்தியா மூன்று பாகிஸ்தான் ராணுவ விமானத் தளங்களில் ஏவுகணைகளை ஏவியது.” எனக் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து இந்தியா இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தொலைக்காட்சி நேரலை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சவுத்ரி, "பெரும்பாலான இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்திய போதிலும், சில ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டன.

நாட்டின் படைகள் தயாராகவே உள்ளன. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். எங்களது பதிலடிக்காக காத்திருங்கள்" என்று பேசியுள்ளார்.

இந்தியா மீது பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான், 'ஆபரேஷன் பனியன் மார்சஸ் (Operation Bunyan Marsus)' என்று பெயரிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவின் முன்னெடுப... மேலும் பார்க்க

`நாம் நினைத்தால் பாகிஸ்தானை ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம்; ஆனால்..!' - அண்ணாமலை ஆவேசம்

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்... மேலும் பார்க்க