செய்திகள் :

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

post image

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொண்டுவர கோரிக்கை முன்வைக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் தூதரகங்களுக்கு வெளியே மனித உரிமைகள் குழு 'இரு நாடுகளுக்கும் நடந்து வரும் பதட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஊக்குவிக்க வேண்டும்" என்றக் கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

Nepal Rights Group Protests
Nepal Rights Group Protests

மனித உரிமைகள் மற்றும் அமைதி சங்கத் தலைவர் கிருஷ்ணா பஹாடி மற்றும் HURPES தலைவர் ரேணுகா பவுடெல் தலைமையில் இந்த போராட்டங்கள் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது, "போரில் யாரும் வெல்ல மாட்டார்கள், மனிதகுலம் மட்டுமே தோற்கடிக்கப்படும்"

"பயங்கரவாதம் எல்லா நேரங்களிலும் வருந்தத்தக்கது" - "அமைதியில் அனைவரும் வெற்றி பெறுவார்கள்" - "தெற்காசியாவை போர் இல்லாத மண்டலமாக மாற்றுவோம்" போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை போராட்டக்கரர்கள் ஏந்திச் சென்றனர்.

மற்றொரு புறம் இரு நாடுகளையும் கண்டிக்கும் வகையிலான பதாகைகளும் இருந்தன. உதாரணமாக "சிந்து நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது எவ்வளவு சட்டபூர்வமானது?" - "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியவர்களை பாகிஸ்தான் ஏன் பாதுகாத்தது?"

"பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஏன் பயங்கரவாதத்தை வளர்க்கிறது?" போன்ற வாசகங்களும் இருந்தன. மேலும், இந்தப் போராட்டத்துக்கு இடையே இந்தியா அரசுக்கும் - பாகிஸ்தான் அரசுக்குமான கடிதங்கள் காத்மண்டுவில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் வழங்கியது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?

உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.இதன் சமீபத்திய உதாரணங்... மேலும் பார்க்க

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவின் முன்னெடுப... மேலும் பார்க்க