செய்திகள் :

Ilaiyaraaja: ``என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்" - இளையராஜா அறிவிப்பு

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன், பயத்தைக் கடந்து, துல்லியமாக, செயல்படுவார்கள் என்பதை அறியாமலே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் இசையமைத்த எனது முதல் சிம்பொனிக்கு "Valiant" (மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

இளையராஜா - மோடி
இளையராஜா - மோடி

நமது தன்னலமற்ற துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என நம்புகிறேன்.

ஜய பேரிகை கொட்டடா! கொட்டடா!

ஜய பேரிகை கொட்டடா! - பாரதியார்.

ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் "Valiant" முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம், மற்றும் ஒரு மாத சம்பளத்தை "தேசிய பாதுகாப்பு நிதி"க்கு ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாகப் பாகிஸ்தான் கூறிய... மேலும் பார்க்க

`பாகிஸ்தான் கபட வேடம்; இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு' -வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந... மேலும் பார்க்க

India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Album

புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் ந... மேலும் பார்க்க

Operation Sindoor: `என் மகள நினைச்சு பெருமைப்படுறேன்..!' - நெகிழும் சோபியா குரேஷிவின் தந்தை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குத... மேலும் பார்க்க

12th Result: "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது; தேர்வுக்கான மதிப்பீடு" - அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக... மேலும் பார்க்க

"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" - தமிழிசை செளந்தரராஜன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க