செய்திகள் :

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

post image

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.

இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. 4 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாமிடம் பிடித்தது. ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற தென்னாப்பிரிக்க அணி தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், இந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்தியா மற்றும் இலங்கை என இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

இந்தத் தொடர் முழுவதும் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளது.

பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 201 ரன்கள் குவித்து இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் மற்ற இந்திய வீராங்கனைகளான பிரதீகா ராவல் (164 ரன்கள்), ஸ்மிருதி மந்தனா (148 ரன்கள்), தீப்தி சர்மா (126 ரன்கள்) எடுத்துள்ளனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம், சதம் எடுக்காவிட்டாலும், அவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

பந்துவீச்சைப் பொருத்தவரையில் ஸ்நே ராணா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த தொடரில் இலங்கை அணியும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. லீக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஹர்சிதா சமரவிக்கிரம 53 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு எதிரான வெற்றிக்கு உதவினார். இந்த தொடரில் இரண்டு அரைசதங்களுடன் 177 ரன்கள் குவித்துள்ள சமரவிக்கிரம, இலங்கை அணி வீராங்கனைகளில் அதிக ரன்கள் குவித்தவராக உள்ளார்.

இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து 4 போட்டிகளில் 88 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் அவருடைய சிறப்பான ஆட்டம் வெளிப்படாத நிலையில், இறுதிப்போட்டியில் நன்றாக விளையாட வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

சமபலத்துடன் உள்ள இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்ட... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொ... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நட... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற ... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில்... மேலும் பார்க்க