செய்திகள் :

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

post image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பின் அதிர்ச்சி நீங்குவதற்குள், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அணியில் இரண்டு மூத்த வீரர்கள் இல்லையென்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். விராட் கோலியின் ஓய்வு பெறும் விருப்பத்தை மாற்றிக் கொள்ளுமாறு பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பத்தி ராயுடு

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் விராட் கோலி. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உங்களுக்குள் இன்னும் பல சிறப்பான ஆட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு போல் இருக்காது. உங்களது முடிவு குறித்து மீண்டும் ஒருமுறை யோசியுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வர... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொ... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நட... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற ... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில்... மேலும் பார்க்க