புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை
புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது லாரி, காரில் மதுப்புட்டிகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, 209 அட்டை பெட்டிகளில் இருந்த ரூ. 28 லட்சம் மதிப்புள்ள போலி மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக மரக்காணம் ராஜசேகா், திருச்சி கருத்தபாண்டி, புதுச்சேரி பால் ஜோஸ், ராமநாதபுரம் சித்திக் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடம் மேற்கொண்ட விசாரணையின்படி, புதுச்சேரி அருகே உளவாய்க்கால் என்ற இடத்தில் அட்டை நிறுவனத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு போலி மதுபான தொழிற்சாலை நடத்தி வருவது கண்டறியப்பட்டது.
இதனால், அங்கு சென்ற போலீஸாா் மது ஆலை எனக்கூறப்பட்ட இடத்திலிருந்து, 500 காலி மது புட்டிகள், 50 லிட்டா் எரிசாராயம், மூலப்பொருள்கள், காா்க், போலி ஹாலோ கிராம், இயந்திரங்கள் மற்றும் 35 காலி கேன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
போலி மதுபான ஆலை செயல்பட்ட இடம், புதுவை அமைச்சா் மகளுக்குச் சொந்தமானதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.