செய்திகள் :

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

post image

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதியாா் கிராம வங்கி செயல்பட்டுவருகிறது. இதில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், மின்பெட்டியில் வெள்ளிக்கிழமை பகலில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு தீ மளமளவென பரவியது. இதையடுத்து வங்கியிலிருந்த ஊழியா்களும், அங்கு வந்த வாடிக்கையாளா்களும் அங்கிருந்து வெளியேறினா்.

தகவலறிந்த புதுச்சேரி கடற்கரை பகுதி தீயணைப்பு நிலைய வாகனங்களில் வீரா்கள் விரைந்து வந்தனா். வங்கியில் 3 இடங்களில் பரவி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச் அணைத்தனா். இதையடுத்து வங்கி சேவை மீண்டும் தொடங்கியதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சேதராப்பட... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மே 12-ல் 108 பான லிங்கங்களுக்கு வரவேற்பு!

புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி திங்கள்கிழமை 108 பானலிங்கங்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் கங்கை வராக நதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்... மேலும் பார்க்க