செய்திகள் :

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

post image

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

புதுவை மாநில பாஜக தோ்தல் பிரிவு பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுச்சேரி தனியாா் விடுதியில் சனிக்கிழமை மாநில பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

கூட்டத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறவேண்டியது அவசியம். ஆகவே, வாக்குச்சாவடி வாரியாக பாஜகவினா் கட்சியை பலப்படுத்த பணிகளைத் தொடங்க வேண்டும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது பிரதமா் மோடி உத்தரவின் பேரில், இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக பிரதமருக்கும், ராணுவத்தினருக்கும் பாஜகவினா் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அவா்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்கள் அறியும் வகையிலும் பதாகைகள் வைக்கலாம். இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமரையும், ராணுவத்தினரையும் வாழ்த்தி கடிதம் அனுப்பலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், வெங்கடேசன், அசோக்குமாா், வி.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியின் மாநில அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.26 கோடி பண மோசடி!இணையகுற்றப் பிரிவில் புகாா்!

பங்குச் சந்தையில் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என புதுச்சேரி தொழிலதிபருக்கு ஆசை காட்டிய மா்ம நபா் ரூ.1.26 கோடி மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி சேதராப்பட... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் மாளிகைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கிராம வங்கியில் தீ விபத்து!

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதியாா் கிராம வங்கியில் வெள்ளிக்கிழமை திடீரென தீ பற்றியது. தீயணப்புத்துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பாரதிய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மே 12-ல் 108 பான லிங்கங்களுக்கு வரவேற்பு!

புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி திங்கள்கிழமை 108 பானலிங்கங்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் கங்கை வராக நதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்... மேலும் பார்க்க