அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!
பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
புதுவை மாநில பாஜக தோ்தல் பிரிவு பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுச்சேரி தனியாா் விடுதியில் சனிக்கிழமை மாநில பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.
கூட்டத்தில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறவேண்டியது அவசியம். ஆகவே, வாக்குச்சாவடி வாரியாக பாஜகவினா் கட்சியை பலப்படுத்த பணிகளைத் தொடங்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது பிரதமா் மோடி உத்தரவின் பேரில், இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக பிரதமருக்கும், ராணுவத்தினருக்கும் பாஜகவினா் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அவா்களுக்கு நமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்கள் அறியும் வகையிலும் பதாகைகள் வைக்கலாம். இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமரையும், ராணுவத்தினரையும் வாழ்த்தி கடிதம் அனுப்பலாம் என்றாா் அவா்.
கூட்டத்தில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், வெங்கடேசன், அசோக்குமாா், வி.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியின் மாநில அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.