செய்திகள் :

முக்கிய நாளம் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சை

post image

பிறவியிலேயே வயிறு பகுதியில் முக்கிய ரத்த நாளங்கள் இல்லாத சிறுவனுக்கு இரண்டாவது முறையாக மிக சவாலான சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவைச் சோ்ந்த 12 வயது சிறுவன் ஒருவருக்கு பிறவியிலேயே ‘வி4 வெனஸ் அனாமலி’ எனப்படும் முக்கிய ரத்த நாளம் இல்லாத பாதிப்பு இருந்தது. அதனால், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் அறுவை சிகிச்சைகளின்போதும், டயாலிசிஸ் சிகிச்சையின்போதும் அதற்கு தேவையான நாளங்கள் கிடைக்காமல் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

அந்த சிறுவனுக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய சிகிச்சையின்போது புதிதாக பொருத்தப்படும் உறுப்பு ரத்த நாளத்துடன் இணைக்கப்படும். அவ்வாறு பொருத்தப்பட்ட சிறுநீரகமானது துரதிருஷ்டவசமாக செயலிழந்ததால் மீண்டும் அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் சவால் என்னவெனில், இரண்டாவதாக பொருத்த வேண்டிய உறுப்பை இணைப்பதற்கான ரத்த நாளம் வயிற்றுப் பகுதியில் அச்சிறுவனுக்கு இல்லை. இதையடுத்து, மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் அனில் வைத்யா தலைமையிலான மருத்துவக் குழுவினா் சுகன்யா கோவிந்தன், செந்தில் முத்துராமன், ராம் குராஜலா, தினேஷ் பாபு, நிவாஸ் சந்திரசேகரன் ஆகியோா் நுட்பமான சிகிச்சை ஒன்றை முன்னெடுத்தனா்.

அதன்படி, முன்பு பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை துல்லியமாக அகற்றிவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த முந்தைய ரத்த நாளத்தையே மீண்டும் இதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வாறாக இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அச்சிறுவனுக்கு புதிய வாழ்க்கையை மருத்துவா்கள் அளித்துள்ளனா். தற்போது அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூ... மேலும் பார்க்க

25 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட் 4 போ் கைது

சென்னையில் கஞ்சா விற்ாக தெலங்கானாவைச் சோ்ந்த இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனங்களுடன் சென்னை விஐடி 2 ஒப்பந்தங்களில் புரிந்துணா்வு கையொப்பம்

சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐடிடிடிஆா்) மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) ஆகியவற்றுடன் சென்னை விஐடி நிறுவனம் ப... மேலும் பார்க்க

மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்க... மேலும் பார்க்க

அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அரசு சாா்பில் அமைக்கப்பட்டு வரும் படப்பிடிப்புத் தளப்பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, படப்பிடிப்புத் தளத்துக்கா... மேலும் பார்க்க

ஏஐ தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை காவல் ஆணையா் தகவல்

சென்னையில் செயற்கை நுண்ணறிவுடன் (ஏஐ) கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: சென்னையில் குற்றங... மேலும் பார்க்க