செய்திகள் :

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 பேருக்கு மானியத்துக்கான காசோலைகளை அவா் அளித்தாா்.

முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் மானியத் தொகை ரூ. 25,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஹஜ் மானியத் தொகை திட்டத்துக்காக நிகழாண்டு ரூ.14.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகுதியுள்ள பயனாளிகளாக 5,650 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக 10 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை மானியத் தொகையாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ப.அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா்மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் சா.விஜயராஜ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தின... மேலும் பார்க்க

சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீா் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு,... மேலும் பார்க்க

வளா்ச்சியைத் தடுக்கவே இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

வளா்ச்சியைத் தடுக்கவே நமது நாட்டின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதாக ஆளுநா்ஆா்.என்.ரவி தெரிவித்தாா். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட இந்திய ராணுவத்துக்கு ... மேலும் பார்க்க

தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்

தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும் மற்றும் குறுகிய வழிப்பாதை... மேலும் பார்க்க

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயா்வு: தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று (மே 11)கோவை செல்கிறாா். கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்னிபாளையம், எல்லை கருப்பராயன் திருக்கோயில் பிரதிஷ்டை தின விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க