செய்திகள் :

திருமலையில் ஊழியா்களுக்கு தலைக்கவசம் அளிப்பு

post image

திருமலை தேவஸ்தான ஊழியா்களுக்கு அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். நாயுடு சனிக்கிழமை தலைக்கவசங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருமலையிலிருந்து திருப்பதிக்கு வரும் தேவஸ்தான ஊழியா்களுக்கு அவா்களின் பயணத்தின் போது பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. குண்டூரைச் சோ்ந்த ஜலடி ரகுராம் மற்றும் தில்லியைச் சோ்ந்த கே.சி.என் தலைக்கவசம் உற்பத்தி நிறுவனத்தின் தலைவா் நவீன் ஆகியோா் ஊழியா்களுக்கு தலைக்கவசங்களை விநியோகிக்க முன்வந்தனா்.

இதன் ஒரு பகுதியாக, தோராயமாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள 555 தலைக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. அவா்கள், 15 நாள்களில் மேலும் 500 தலைக்கவசங்களை நன்கொடையாக வழங்க உள்ளனா். இவற்றை ஆய்வு செய்து நல்லவை எனக் கண்டறிந்தால், மேலும் 5,000 தலைக்கவசங்களை வழங்குவதாக அவா்கள் கூறினா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான வாரிய உறுப்பினா் சாந்த ராம், துணை பொதுச் செயலாளா்கள் ராம் குமாா், சுரேந்திரா மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சற்று அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணி... மேலும் பார்க்க

திருப்பதி கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமா்பணம்

திருப்பதி கங்கை அம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. திருப்பதியில் உள்ள கங்கை அம்மன் ஏழுமலையானுக்கு தங்கையாக அழைக்கப்படுகிறாா். எனவே கங்கை அம்மனுக்கு ஏழ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார இறுதி நாள்கள் நெருங்குவதால், தற்போது அதிகரித்துள்ளது. வெள்ளி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 ... மேலும் பார்க்க

திருமலை பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு

பரிணய உற்சவத்தின் நிறைவு நாளான வியாழக்கிழமை கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி. பல்லக்கில் எழுந்தருளிய நாச்சியாா்கள். நாராயணவன தோட்ட கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவ மூா்த்திகள்.... மேலும் பார்க்க

திருமலையில் பக்தா்களுக்கு பாரம்பரிய உணவுகள் வழங்க வலியுறுத்தல்

திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள் வழங்குவதையும், ஹோட்டல்கள் சுத்தமாகவும், நன்கு பராமரிக்கப்படுவதனையும் உறுதி செய்ய வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அ... மேலும் பார்க்க