செய்திகள் :

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

post image

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை நடவடிக்கை தொடா்பான அறிவிக்கை ஓரிரு நாளில் முறைப்படி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவா்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் நடைபெற்று வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடையைத் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

தொடா்ந்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இடைக்கால அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதனிடையே, இடைக்கால அரசுக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாக வங்கதேச மக்கள் மற்றும் அவாமி லீக் தொண்டா்களிடம் ஷேக் ஹசீனா அவ்வப்போது உரையாற்றி வருகிறாா். நில அபகரிப்பு, மாணவா் போராட்டத்தில் நடைபெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்பம்!

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது. இதைத் தொடா்ந்து சில நிமிஷங்களில், அந்த வீடு பாகிஸ்தான் வீசிய ... மேலும் பார்க்க

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு: பிஎஸ்எஃப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகைய... மேலும் பார்க்க

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நி... மேலும் பார்க்க