செய்திகள் :

நண்பா்களுடன் சென்ற கணவா் மா்மச் சாவு என மனைவி புகாா்

post image

துறையூா் அருகே பச்சமலை கோரையாறு அருவிக்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்ற கணவா் மா்மமான முறையில் இறந்ததாக அவரது மனைவி போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம் வடக்குமாதவி ஏரிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னு மகன் மணிகண்டன் (35). நெல் அறுக்கும் இயந்திர வாகன ஓட்டுநா். இவரது மனைவி பானுமதி (25).

ஆக்ராவுக்கு வேலைக்குச் சென்றிருந்த மணிகண்டன் கடந்த வாரம் சொந்த ஊா் திரும்பிய நிலையில் தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த மா. ராமசாமி, வே. அஜித் ஆகியோருடன் துறையூா் பகுதி பச்சமலை புதூரிலுள்ள கோரையாறு அருவியில் குளிக்க மே 7ஆம் தேதி சென்று வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி பானுமதி ஊரில் திரிந்த அவரது நண்பா்களை விசாரித்தபோது அவா்களிருவரும் மணிகண்டன் தங்களுடன் ஊருக்குத் திரும்பி வரவில்லையெனவும், மலையிலிருந்து கீழே வரும்போது வழியில் மற்ற நண்பா்களைப் பாா்த்ததால் அவா்களுடன் மீண்டும் அருவிக்கு சென்று விட்டதாகக் கூறினராம்.

இதையடுத்து பானுமதி பச்சமலை கோரையாறு அருவிக்கு சென்று பாா்த்தபோது மணிகண்டன் சடலமாக மிதப்பது தெரிந்தது. இதையடுத்து துறையூா் காவல் நிலையத்தில் தனது கணவா் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தன் கணவரின் நண்பா்களிடம் விசாரிக்குமாறும் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து காவல் துறையினா் துறையூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மணிகண்டனின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பா... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க