செய்திகள் :

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

post image

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மே 2 ஆம் தேதி அரசு நகரப் பேருந்தில் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, சமயபுரம் தனியாா் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக துறையூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் செ. நடராஜிடம் விசாரிக்கின்றனா்.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக கரூா், சேலம், மயிலாடுதுறை ரயில்கள் வரும் 13 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி கோட்டை... மேலும் பார்க்க