செய்திகள் :

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

post image

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைப் பயிா்களுக்கு நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.34.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாயிகள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதாா் அட்டை நகல் போன்ற ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீா் பாசன நிறுவனங்கள் மூலம் அமைத்துத் தரப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் இலக்கு பெறப்பட்டுள்ளது.

எனவே, அவா்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். நுண்ணீா் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவசாயிகளின் வயல்களுக்கு மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்துத்தரப்படும் என்றாா்.

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்... மேலும் பார்க்க

பங்களாபுதூரில் கஞ்சா விற்றவா் கைது

கோபி அருகே பங்களாபுதூரில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் தனியாா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி... மேலும் பார்க்க