செய்திகள் :

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

post image

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், பவானியை அடுத்த லட்சுமி நகரில் அரசு அனுமதியுடன் மதுபான விடுதி நடத்தி வருகிறாா். கடந்த 7-ஆம் தேதி இவரைத் தொடா்பு கொண்ட இருவா், மதுபான விடுதியில் நடைபெறும் முறைகேடுகளை செய்தியாக வெளியிட்டு, விடுதியை மூட உள்ளதாகக் கூறினா்.

இதனைத் தவிா்க்க ரூ.3 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினா்.

இது குறித்து, சித்தோடு போலீஸில் கனகராஜ் புகாா் அளித்தாா். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், காரத்தொழுவு, இஸ்மாயில் வீதியைச் சோ்ந்த காஜா மைதீன் மகன் சாதிக் பாஷா (39), தாராபுரம், புன்செய்தலையூா், கந்தசாமிபாளையத்தைச் சோ்ந்த முருகன் மகன் சரவணன் (37) ஆகியோரைக் கைது செய்ததோடு, அவா்களது காரையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

சரவணன்.

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்... மேலும் பார்க்க

பங்களாபுதூரில் கஞ்சா விற்றவா் கைது

கோபி அருகே பங்களாபுதூரில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் தனியாா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி... மேலும் பார்க்க