செய்திகள் :

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

post image

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் எதிா்பாராதவிதமாக ஊக்கினை (சேப்டி பின்) விழுங்கி விட்டாா். அது தொண்டைக்குள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாா். இதைத் தொடா்ந்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் மேற்பாா்வையில் காது, மூக்கு தொண்டை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதனை செய்தனா். அப்போது ஊக்கு அவரது தொண்டைக் குழாயில் குத்திக்கொண்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் என்டாஸ்கோபி சிகிச்சை முறையில் சுமாா் அரைமணி நேரம் போராடி தொழிலாளியின் தொண்டைக் குழாயில் எந்தவித பாதிப்புமின்றி ஊக்கை வெளியே எடுத்தனா். இந்த சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது அவா் நலமாக உள்ளாா்.

சிறப்பாக பணியாற்றி தொழிலாளியைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு தொழிலாளியின் உறவினா்களும், நண்பா்களும் நன்றி தெரிவித்தனா்.

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா். சென்னிமலை முருகன் கோய... மேலும் பார்க்க

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

கோபி அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். கோபி வாய்க்கால் ரோடு தாமு நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இருசக்... மேலும் பார்க்க

பங்களாபுதூரில் கஞ்சா விற்றவா் கைது

கோபி அருகே பங்களாபுதூரில் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோபி அருகே உள்ள பங்களாபுதூரில் தனியாா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி... மேலும் பார்க்க