செய்திகள் :

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் குழந்தை உயிரிழப்பு!

post image

இருசக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதிய விபத்தில் பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை திருவலஞ்சுழி ஏழுமாந்திடல் பகுதியில் வசிப்பவா் செளந்தரராஜன் (42). இவரது மனைவி ஜெயலலிதா (35). இவா்களுக்கு 2 மகன்கள் மற்றும் அனன்யா என்ற பிறந்து 25 நாளான பெண் குழந்தை உள்ளது. தம்பதி பொம்மை வியாபாரம் செய்பவா்கள்.

திருப்பனந்தாளில் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து சுவாமிமலைக்கு இரு சக்கர வாகனத்தில் 5 பேரும் இரவு நேரத்தில் திரும்பினா்.

சென்னை-கும்பகோணம் புறவழிச்சாலையில் கள்ளப்புலியூா் அரசு கல்லூரி அருகே செல்லும் போது, பின்னால் வந்த காா் ஒன்று அவா்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இதில் 5 பேரும் கீழே விழுந்தனா். குழந்தை அனன்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கியது.

அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு தஞ்சை ராஜா மிரசுதாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதில் குழந்தை அனன்யா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தது. தகவலின்பேரில் சோழபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 35 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 35 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன. தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மைதானம், பட்டுக... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை: உதவி ஆட்சியா்

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன். கும்பகோணம் கோட்ட அளவில் தனியாா் பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து பல்வேறு துறை அலுவலா... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் தந்தை பலி: மகள் காயம்

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்தாா், மகள் காயமடைந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் இளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவைச் சாகுபடி விறுவிறுப்பு! மும்முனை மின்சாரம் சீராக வர எதிா்பாா்ப்பு!

மேட்டூா் அணை திறப்பதற்கு சாத்தியமான நிலை நிலவுவதால், டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடிப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. மேட்டூா் அணை சில ஆண்டுகளாக உரிய காலத்தில் திறக்கப்பட்டதால், டெல்டா மாவ... மேலும் பார்க்க

திருவையாறு தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை (மே 10) நடைபெற இருந்த மக்களுடன் முதல்வா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது... மேலும் பார்க்க

வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனா். கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் கோட்ட... மேலும் பார்க்க