செய்திகள் :

Operation Sindoor: `என் மகள நினைச்சு பெருமைப்படுறேன்..!' - நெகிழும் சோபியா குரேஷிவின் தந்தை

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதி முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளைக் கொண்டு 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில், 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங்,
கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங்,

இந்த 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங், என இரண்டு பெண் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இவர்கள் இருவரும்   ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு தலைமை வகித்திருக்கிறார்கள். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷி குறித்து அவரது அம்மாவும், அப்பாவும் பேட்டி அளித்திருக்கின்றனர்.

பெருமையாக இருக்கிறது!

சோபியா குரேஷி குறித்து பேசிய அவருடைய அம்மா, “ நாட்டிற்காக எங்களது மகள் செய்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த செயல், மற்றவர்களும்  தங்களது மகள்களை நாட்டிற்கு சேவை ஆற்ற வைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மகள் நாட்டிற்காக இதைச் செய்திருக்கிறார் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

சோபியா குரேஷி மற்றும் அவரது அம்மா
சோபியா குரேஷி மற்றும் அவரது அம்மா

சிறுவயதில் இருந்தேன் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான்  சோபியா குரேஷியின் ஆசை” என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சோபியா குரேஷி குறித்து பேசிய அவரது அப்பா, “நாங்கள் நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் இருக்கிறோம். என் மகளை நினைத்து பெருமைக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`பாகிஸ்தான் கபட வேடம்; இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு' -வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன் அன்று இந்தியா பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்கியது.இதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் இறந்ததாக பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந... மேலும் பார்க்க

India - Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை... Photo Album

புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்காலத்தில் ந... மேலும் பார்க்க

12th Result: "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது; தேர்வுக்கான மதிப்பீடு" - அமைச்சர் அன்பில் மகேஸ்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கான இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக... மேலும் பார்க்க

"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" - தமிழிசை செளந்தரராஜன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியி... மேலும் பார்க்க

பஹல்காம் பதிலடி: 15 நாள்களில் `ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை இந்தியா எப்படி நடத்தியது? - முழு விவரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது எதிர்தாக்குதலான "ஆபரேஷன் சிந்தூரை" நடத்தியுள்ளது.இந்த ”ஆபரேஷன் சிந்தூர்” நடத்த கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கமும் பாதுகாப்பு ... மேலும் பார்க்க

சிவகாசி: பொது சுகாதார வளாகத்தை இடிக்க எதிர்ப்பு; கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

சிவகாசி மாநகராட்சியின் திருத்தங்கல் பகுதி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துரைப்பாண்டி. இவருடைய வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அதிகாரிகள் இடிக்க முயற்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்... மேலும் பார்க்க