செய்திகள் :

இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?

post image

உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.

இதன் சமீபத்திய உதாரணங்கள் 'ரஷ்யா - உக்ரைன் போர்' மற்றும் 'இஸ்ரேல் - காசா போர்'.

தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றாலும், அவரது அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை

நேற்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்ற நிலை குறித்து, "வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொடர்ந்து இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பதற்ற நிலை விரைவில் தீர வேண்டும் என்று நினைக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பிரச்னை இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இரு நாட்டுத் தலைவர்களுடனும் நல்ல உறவு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று காலை தொலைபேசியில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் பேசியுள்ளார் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ.

மார்கோ ரூபியோ அசிம் முனீரிடம், "இரு நாடுகளும் பதற்ற நிலையைக் குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும், பிரச்னை பெரிதாகாமல் இருக்க அமெரிக்கா உதவி செய்யத் தயார்" என்று கூறியிருக்கிறார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று மார்கோ ரூபியோவுடன் பேசியுள்ளார். இதுகுறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இன்று காலை மார்கோ ரூபியோவுடன் பேசினேன்.

இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அளவிடப்பட்டதாகவும், பொறுப்பானதாகவும் இருக்கும். இப்போதும் அப்படியே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க் ரூபியோவின் முயற்சி கைக்கூடுமா... இரு நாடுகளும் பதற்ற நிலையை குறைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா முன்னெடுத்த ஆபரேஷன் சிந்தூரைத் தொடந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பெரும் பதற்ற நிலை உருவானது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரிதாக வெளியில் பேசவில்லை என்றா... மேலும் பார்க்க

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" - ஓவைசி சொல்வது என்ன?

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வி... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க