செய்திகள் :

ஆப்கன் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாக். குற்றச்சாட்டு: தலிபான் அரசு மறுப்பு

post image

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இனயதுல்லா கவாரிஸ்மி இது குறித்து பேசுகையில், ஆப்கன் மண்ணிலும் இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ஹுரியத் வானொலியில் தெரிவித்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி வந்து இந்திய முப்படைகளின் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியிருந்த பாகிஸ்தான் ராணுவம், தான் கூறிய பொய்யை உண்மையாக்க இந்தியாவின் தாக்குதல் எல்லையைத் தாண்டி ஆப்கன் மண்ணிலும் ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் சொல்வது போல ஆப்கன் மண்ணில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்று கூறியிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்து இந்தியாவின் வெளியுறவு விவகாரத் துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பாகிஸ்தான் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், ஆப்கானிஸ்தானுக்கு தனது கூட்டாளி யார், எதிரி யார் என்று நன்கு தெரியும் எனவும் கூறியிருந்தது.

இந்தியாவுக்கு எதிராக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தலிபான் அரசின் இந்த விளக்கம் வந்துள்ளது.

சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு

புது தில்லி: பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து திறந்துவிடப்பட்ட சிந்து நதி நீர் விவகாரத்தில், முன்னதாக அறிவித்தபடி இதே நிலைப்பாடே தொடரும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திராவிடத்துக்கும் பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? சுவாரசியமான வரலாறு!

திராவிடத்துக்கும் மேற்கு பாகிஸ்தனிலுள்ள பலூசிஸ்தானுக்கும் என்ன தொடர்பு? என்பதைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம். பலூசிஸ்தான் - இருபதாண்டுகளுக்கும் மேலாக செய்திகளில் இடம் பெற்ற ஒரு ச... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் ஒப்புதல்: துணைப் பிரதமர்

இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகப் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். எல்லையில் இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த மே 7ஆம் தொடங்க... மேலும் பார்க்க

போரை நிறுத்த இந்தியா - பாகிஸ்தான் சம்மதம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

போரை நிறுத்த இந்தியா பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகின... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் தந்தை அல்-காய்தா அணு விஞ்ஞானியா?

பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளரின் தந்தை அல்-கய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட அணு விஞ்ஞானி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் மோத... மேலும் பார்க்க

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் பரிசீலிக்கத் தயார்: பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியா மீதான பொறுமையை இழந்துவிட்டதால்தான் தாக்குதல் நடத்தினோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க