செய்திகள் :

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

post image

ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சிறுவனின் சடலம் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பலியான சிறுவன் குதிபுரி ஜதன் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

சடலத்தை மீட்ட போலீஸார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மே 8 ஆம் தேதி, தனது தந்தை ராஜ்பால் சிங்கின் ஆலைக்கு அருகில் உள்ள வயலுக்குச் சென்று துப்புரவு பணிக்குச் சென்றபோது, ​​சிறுவன் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

குடும்பத்தினர் ஆரம்பத்தில் சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் போலீஸில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீஸார், சிறுவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வயலில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சடலத்தில் நிறைய காயங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் பெருமளவு சிதைந்துவிட்டதாகவும், எனவே உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மீதமுள்ள தகவல்கள் தெளிவாகத் தெரிய வரும் என்றும் போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.

அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்று, மீதமுள்ள கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தார்.அப்போது கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து உத்தரப் பிரதேச முதல்வருக்கு ரா... மேலும் பார்க்க

தவறான தகவல்களைப் பரப்பும் பாகிஸ்தான்: சோஃபியா குரேஷி

பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்துவந்த போர்ப் பதற்றம் இன்று மாலை 5 மணி முதல் முடிவுக்கு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு ... மேலும் பார்க்க

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் சந்திப்பு

போர் நிறுத்த அறிப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடியை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் ... மேலும் பார்க்க

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

புது தில்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதௌ குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக... மேலும் பார்க்க