செய்திகள் :

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

post image

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் இந்தியாவின் முன்னெடுப்புகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார்கள்.

எதிர்வினை மட்டுமே..!

முதலில் பேசிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது...

``நான் முன்னரே பலமுறை கூறியுள்ளேன். இந்தப் பதற்றத்திற்கும், தூண்டுதல்களுக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளே காரணம். பதிலுக்கு தான் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது... எதிர்வினையாற்றி உள்ளது.

இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் பல தூண்டுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதை பார்த்தோம்.

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தியாளர் சந்திப்பு
இந்திய வெளியுறவுத் துறையின் செய்தியாளர் சந்திப்பு

இந்தியா மீது தாங்கள் தொடுத்த பதிலடி தாக்குதல் என்று பாகிஸ்தான் கூறிய அனைத்துமே பலத்த பொய்கள் மற்றும் போலியான தகவல்கள் ஆகும்.

இந்தப் பொய்கள் அனைத்தும் பாகிஸ்தான் அரசின் அமைப்புகள் கட்டவிழ்த்து விட்டது ஆகும். சிர்சா, சுரத் வான் தளம் அழிப்பு, ராணுவ தளவாடங்கள் அழிப்பு, ஆதன்பூரில் உள்ள எஸ் 400 அழிக்கப்பட்டது, இந்தியாவின் சைபர் கட்டமைப்புகள் அழிப்பு என அவர்கள் கூறுவது அனைத்துமே பொய்.

பாகிஸ்தான் முன்னெடுக்கும் இந்தத் தவறான தகவல்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் இருக்கும் மக்கள் மற்றும் மக்கள் வாழும் இடங்களை குறிவைப்பதாக பிரசாரம் செய்து வருகிறது. இதுமூலம் கிளர்ச்சியை உருவாக்க முயல்கிறார்கள்.

பிரிவினையை உருவாக்க முயல்வது...

இன்று காலை ராஜோரி மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் அந்த மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ் குமார் தாப்பா உயிரிழந்துள்ளார். ஃபிரோஸ்பூர் மற்றும் ஜலந்தூரில் மக்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அதிகாரிகளும் அம்ரிஸ்டர் பகுதியில் ஏவுகணைகளை இந்தியா ஏவி வருவதாக பேசி வருகிறார்கள். இப்படி அவர்கள் பிரிவினையை உருவாக்க முயல்வது தோல்வியில் தான் முடியும்.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தொலைகாட்சியில் பேசும்போது, இந்திய மக்கள் இந்திய அரசை பல்வேறு விஷயங்களில் விமர்சிக்கிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்வதை பார்த்தோம். இப்படி மக்கள் தங்களது அரசை விமர்சிப்பதை பார்ப்பதற்கு பாகிஸ்தானிற்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். இது தான் ஜனநாயகத்தின் ஹால்மார்க். அதுக்குறித்து அவர்களுக்கு தெரியாது.

ஆப்கானிஸ்தானை இந்திய ஏவுகணை தாக்ககியது என்று குற்றசாட்டை முன்வைக்கிறார்கள். ஆனால், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்த நாடு அவர்களின் மக்களுக்கும், அவர்களது கட்டமைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்பதை நினைவுப்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறேன்.” என்றார்.

இந்தியா - பாகிஸ்தான்: அணு ஆயுதங்கள் குறித்த கேள்வி; பாகிஸ்தான் அமைச்சரின் பதில் என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலையில், 'அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா?' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், "நான் உலகிற்குச் சொல்லிக... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?

உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.இதன் சமீபத்திய உதாரணங்... மேலும் பார்க்க

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க