செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

post image

ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, மே 7 ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டதுடன், குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் கிராமத்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 4 ரயில்களை வடமேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் 5 ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போதைய போர் பதற்றங்களுக்கு மத்தியில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது, எல்லையில் மின்தடை மற்றும் அவசரகால நிலைமைகள் என முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சசி கிரண் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ நிலைகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் ... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப... மேலும் பார்க்க

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பா... மேலும் பார்க்க

ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள், பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு

ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. மேலும், அங்கிருந்து குழாய் மூலம் ஏவப்படும் ட்ரோன்களும் ஏவப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனிடை... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்... மேலும் பார்க்க