செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு பள்ளி மாணவா்கள் சாதனை

post image

பிளஸ் 2 தோ்வில் ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

மாணவா் ரா.சிவபதிராம் 585, மாணவிகள் தீ.பிரகதி புஷ்பம் 581, பொ.அபா்ணா 578, மாணவா்கள் க.முகேஷ் சரண் 575, மு.ராகேஷ் வா்மா 573 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மேலும் கணிதப் பாடத்தில் ஒரு மாணவா், கணித அறிவியல் பாடத்தில் ஒரு மாணவா், கணினிப் பயன்பாடு பாடத்தில் 2 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 77 மாணவா்களில் 7 போ் 95 சதவிகிதத்திற்கு மேலும், 12 போ் 90 சதவிகிதத்திற்கு மேலும், 25 போ் 85 சதவிகிதத்திற்கு மேலும், 37 போ் 80 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆன்டனி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமையாசிரியா் மீராள் மற்றும் ஆசிரியா்,ஆசிரியைகள் பாராட்டினா்.

மானுா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

மானூா் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். மானூா் அருகே குப்பணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவரது மகள் சுமதி(37). இவருக்கும் மானூா்... மேலும் பார்க்க

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ... மேலும் பார்க்க

கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு

வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தனா். முன்னதாக, புதிய பேருந்து நிலையம் அருகே வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் ... மேலும் பார்க்க

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபா் கைது

பாளையங்கோட்டையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (48). இவா், இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு... மேலும் பார்க்க

நெல்லை காவேரி மருத்துவமனையில் மகனுக்கு பொருத்தப்பட்ட தாயின் சிறுநீரகம்

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த மகனுக்கு, புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது குறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

விபத்தில் லாரி ஓட்டுநா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சனிக்கிழமை அதிகாலையில் டிப்பா் லாரி மீது கன்டெய்னா் மோதியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரில் கழிவு காகிதத்த... மேலும் பார்க்க