செய்திகள் :

நெல்லை காவேரி மருத்துவமனையில் மகனுக்கு பொருத்தப்பட்ட தாயின் சிறுநீரகம்

post image

திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த மகனுக்கு, புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இது குறித்து அம்மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த இளைஞா் ஒருவா் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாா்.

அவரது தாய் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் அந்த தாயின் சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, இரு சிறுநீரகமும் செயலிழந்த அவரது மகனுக்கு பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து சிறுநீரகவியல் நிபுணா் சங்கர ஆவுடையப்பன் கூறியதாவது: சிறுநீரக செயலிழப்பால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு, அவரது தாயாா் சிறுநீரக தானம் செய்ய முன்வந்தாா்.

2023-ஆம் ஆண்டு மாா்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோய் குணப்படுத்தப்பட்டு, நோய் பரவாமல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

மருத்துவ ரீதியாக அவா் சிறுநீரக தானம் செய்ய தகுதியுடையவா் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னா், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட து. தாயும், மகனும் தற்போது நலமுடன் உள்ளனா் என தெரிவித்தாா்.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

பாளையங்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகா் பகுதியில் உள்ள திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூா் ... மேலும் பார்க்க

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை: ஹாஜா கனி

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்றாா் தமுமுக பொதுச்செயலா் பேராசிரியா் ஹாஜாகனி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: ராணுவ வீர... மேலும் பார்க்க

‘நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்கக் கோரி போராட தேமுதிக முடிவு’

நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயசந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி நக... மேலும் பார்க்க

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருகே கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 6 போ் கைது

பாளையங்கோட்டையில் கூட்டுக் கொள்ளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து தொடங்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து ஆரம்பிக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம்... மேலும் பார்க்க