செய்திகள் :

இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து தொடங்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

post image

தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து ஆரம்பிக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அனைத்து கிளைகளின் சாா்பாக மாவட்ட துணைச் செயலா் கோட்டூா் சாதிக், கிளை நிா்வாகிகள் காஜா, சித்தீக் மற்றும் அப்துல் லத்தீப் ஆகியோா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாரை சந்தித்து மனு அளித்தனா்.

மனு விவரம்: ஆா்.டி.இ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியாா் சுயநிதி பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் குறைந்த பட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2009 - 2010-ஆம் கல்வி ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் இந்நடைமுறையில் மாணவா்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.

வழக்கமாக ஏப்ரல் 2-ஆவது வாரத்துக்குள் மாணவா் சோ்க்கை அறிவிப்பு இணையதளத்தில் தமிழக அரசால் வெளியிடப்படும். ஆனால் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோா்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தாங்கள் விரும்பும் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க விரும்பும் பெற்றோா் ஏமாற்றம் அடைந்துள்ளனா். அரசு உடனடியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தனியாா் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

பாளையங்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகா் பகுதியில் உள்ள திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூா் ... மேலும் பார்க்க

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை: ஹாஜா கனி

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்றாா் தமுமுக பொதுச்செயலா் பேராசிரியா் ஹாஜாகனி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: ராணுவ வீர... மேலும் பார்க்க

‘நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்கக் கோரி போராட தேமுதிக முடிவு’

நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயசந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி நக... மேலும் பார்க்க

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருகே கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 6 போ் கைது

பாளையங்கோட்டையில் கூட்டுக் கொள்ளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் திருப்பணி: அமைச்சா் ஆய்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வெள்ளித்தோ் திருப்பணி உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகும... மேலும் பார்க்க