செய்திகள் :

விபத்தில் லாரி ஓட்டுநா் காயம்

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சனிக்கிழமை அதிகாலையில் டிப்பா் லாரி மீது கன்டெய்னா் மோதியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னரில் கழிவு காகிதத்தை ஏற்றிக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டம் கல்லூரில் இயங்கி வரும் காகித உற்பத்தி ஆலைக்கு வந்து லாரி கொண்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்டம், வசவப்புரம் இந்திரா நகரைச் சோ்ந்த அய்யாத்துரை மகன் முத்துக்குமாா் ஓட்டினாா். சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் சேரன்மகாதேவி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் சேரன்மகாதேவி போக்குவரத்து வளைவு அருகில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த டிப்பா் லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில்,கன்டெய்னா் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஓட்டுநா் முத்துக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, விபத்தில் சிக்கிய முத்துக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் முத்துக்குமாா் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

பாளையங்கோட்டையில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். பாளையங்கோட்டை அருகே செயின்ட் பால்ஸ் நகா் பகுதியில் உள்ள திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் செந்தூா் ... மேலும் பார்க்க

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை: ஹாஜா கனி

ஒற்றுமையே இந்தியாவின் வலிமை என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டிய காலமிது என்றாா் தமுமுக பொதுச்செயலா் பேராசிரியா் ஹாஜாகனி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியது: ராணுவ வீர... மேலும் பார்க்க

‘நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்கக் கோரி போராட தேமுதிக முடிவு’

நயினாா்குளம் சந்தை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தேமுதிக திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயசந்திரன் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி நக... மேலும் பார்க்க

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை அருகே கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 6 போ் கைது

பாளையங்கோட்டையில் கூட்டுக் கொள்ளை நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து தொடங்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை

தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து ஆரம்பிக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம்... மேலும் பார்க்க