செய்திகள் :

பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

திருப்பூா் மாவட்டத்தில் பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2026 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவின்போது மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வா்த்தகத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கு இந்த விருது மாநில அளவில் வழங்கப்படவுள்ளது.

ஆகவே, தகுதி வாய்ந்த நபா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 35-இல் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.10.84 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3.6 டன் தேங்காய், 6 டன் எள், 1.1 டன் தேங்காய்ப் பருப்பு ஆகியவற்றை விற்பன... மேலும் பார்க்க

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 10 வாகனங்களை இயக்கத் தடை

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு குறைபாடுகள் இருந்த 10 வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு காந்த... மேலும் பார்க்க

மூலனூா் அருகே 1,550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 1,550 கிலோ ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூா்-வெள்ளக்கோவில் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்

வெள்ளக்கோவிலில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே காங்கயம் மோட்டாா் வாக... மேலும் பார்க்க

தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

தாராபுரத்தில் உழவா் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில்... மேலும் பார்க்க