பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்!
திருப்பூா் மாவட்டத்தில் பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2026 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவின்போது மத்திய அரசால் பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப்பணி சேவை மற்றும் வா்த்தகத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கு இந்த விருது மாநில அளவில் வழங்கப்படவுள்ளது.
ஆகவே, தகுதி வாய்ந்த நபா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 35-இல் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.