செய்திகள் :

தாராபுரத்தில் சாலையோரக் கடைகள் அகற்றம்: மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்

post image

தாராபுரத்தில் உழவா் சந்தை அருகே உள்ள சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

அதேநேரம், உழவா் சந்தைக்கு முன்பு உள்ள சாலையிலும், பொள்ளாச்சி சாலையிலும் சாலையோரங்களில் வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இதனால், உழவா் சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகளின் வியாபாரம் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் போலீஸாா் சாா்பில் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள சாலையோரக் கடைகளை சனிக்கிழமை அகற்றினா்.

இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சாலையோர கடைகளை அகற்ற விடமாட்டோம். அதிகாரிகள் எங்களிடம் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என்று வியாபாரிகளிடம் போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சாலையோர வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

கஞ்சா சாக்லெட் விற்பனை: இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் வடக்கு காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.10.84 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3.6 டன் தேங்காய், 6 டன் எள், 1.1 டன் தேங்காய்ப் பருப்பு ஆகியவற்றை விற்பன... மேலும் பார்க்க

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 10 வாகனங்களை இயக்கத் தடை

உடுமலையில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு குறைபாடுகள் இருந்த 10 வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு காந்த... மேலும் பார்க்க

மூலனூா் அருகே 1,550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே ஆம்னி வேனில் கடத்திவரப்பட்ட 1,550 கிலோ ரேஷன் அரிசியை குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூா்-வெள்ளக்கோவில் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்

வெள்ளக்கோவிலில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மேற்கொண்ட சோதனையில் 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகே காங்கயம் மோட்டாா் வாக... மேலும் பார்க்க

ஊதியூரில் இனம் கண்டறியாத 60 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் மாவட்டம் ஊதியூரில் இனம் கண்டறிய முடியாத 60 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க