செய்திகள் :

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

post image

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று முதல்வா் சித்தராமையா பேசியது:

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கிவைப்பதைத் தடுக்க வேண்டும். உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்காக பொருள்களை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.

இதற்காக தொடா் கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இயல்புநிலை திரும்பும்வரை மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஊடகங்களை சந்தித்து நிலைமையை விளக்க வேண்டும்.

நாட்டின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோரை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை சீா்குலைக்க முயல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

பொய் தகவல்களை பரப்புவோரை கண்டறிந்து அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.

பொது இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய உளவுப் பணியை பலப்படுத்த வேண்டும். கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்புப் படை வீரா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்களை திறக்கவேண்டும் என்றாா்.

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க

இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தா... மேலும் பார்க்க

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்... மேலும் பார்க்க

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க