செய்திகள் :

இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இயல்புநிலை திரும்பும் வரை காவல் துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படாது. இயல்புநிலை திரும்பும்போது அதை மத்திய அரசு தெரிவிக்கும். அதுவரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்தகாலத்தில் நடந்தபோரின்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியுள்ளது. வடகன்னடம் முதல் தென்கன்னட மாவட்டங்கள் வரை நாம் மிகுந்த எச்சரிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடலோரப் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்களில் கடலோரப் படையைத் தவிர காவல் துறையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா கலந்தாலோசிக்கவுள்ளாா்.

உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருள்கள், நீா், மருத்துவமனை, மருந்துகள் உள்ளிட்டவை தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி கா்நாடக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். அங்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க

புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தா... மேலும் பார்க்க

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்... மேலும் பார்க்க

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க