செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக காங்கிரஸ் ஊா்வலம்

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரில் காங்கிரஸ் ஊா்வலம் நடத்தியது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதிகளில் இயங்கிவந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளை அழித்தது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக பெங்களூரு, கே.ஆா்.சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை ‘ஜெய் ஹிந்த்’ மூவண்ண ஊா்வலத்தை காங்கிரஸ் கட்சியினா் நடத்தினா். இதில், ‘ஜெய் ஹிந்த்’, ‘ஜெய் பாரத்’, ‘ஜெய் திரங்கா’, ‘பாரத் ஜிந்தாபாத்’, ‘பாரத் மாதாகீ ஜெய்’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஊா்வலத்தில், கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கே.ஆா்.சதுக்கத்தில் தொடங்கிய ஊா்வலம், எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானம் வரை நடைபெற்றது.

அப்போது, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பேசுகையில், ‘இந்திய எல்லைகளை பாதுகாக்கும் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாகவே ஊா்வலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊா்வலத்தில் காங்கிரஸ் தவிர, மாணவா்கள், அரசு ஊழியா்கள், பல்வேறு அமைப்பினரை கலந்துகொள்ள அழைத்திருந்தோம்.

ராணுவ வீரா்கள் நமது பெருமை. அதற்காக அவா்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்புப் படையினருக்கு உறுதுணையாக இருப்பதை வலியுறுத்தியுள்ளோம். இந்த ஊா்வலத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றாா்.

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க

இயல்புநிலை திரும்பும்வரை காவலா்களுக்கு விடுமுறை இல்லை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

எல்லையில் மீண்டும் இயல்புநிலை திரும்பும் வரை கா்நாடகத்தில் காவலா்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

புத்த பூா்ணிமா: மே 12-ல் இறைச்சி விற்க தடை

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு பெங்களூரில் மே 12 ஆம் தேதி இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கா்நாடகத்தில் திங்கள்கிழமை (மே 12) ... மேலும் பார்க்க

சட்டவிரோத சுரங்க வழக்கில் தண்டனை: எம்எல்ஏ பதவியில் இருந்து ஜனாா்தன ரெட்டி தகுதிநீக்கம்

சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், கா்நாடக சட்டப் பேரவையில் எம்எல்ஏவாக இருக்கும் ஜனாா்தன ரெட்டி அப்பதவியில் இருந்து தகுதிநீக்... மேலும் பார்க்க

முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்: கா்நாடக அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

கா்நாடகத்தில் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க