செய்திகள் :

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

post image

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதன்படி, வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலையில், ஜம்மு, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய இராணுவம் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை முறியடித்ததுடன், அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சோபியா குரேஷி
சோபியா குரேஷி

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை சார்பில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கலந்துகொண்டார். ராணுவம் சார்பாக சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் கலந்துகொண்டனர்.

சோபியா குரேஷி பேசுகையில், "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் ராணுவ நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான், துருக்கியின் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்தியா அவற்றை வழிமறித்து அழித்தது.

பாகிஸ்தான் நேற்றைய தினம் அதன் வான் வழித்தடத்தை மூடவில்லை. பயணிகள் விமானங்களை அனுமதித்த அதே வேலையில் துருக்கிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான்தான் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. நேற்று இரவில் இந்திய ராணுவ தளங்களை தாக்க முயன்றதில், சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை ஆராய்ந்து வருகிறோம்." எனக் கூறியுள்ளார்.

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க

Operation Sindoor: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்; முறியடித்த இந்தியா - ராணுவம் சொல்வதென்ன?

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற... மேலும் பார்க்க

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க