செய்திகள் :

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

post image

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளே கிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் (Murali Naik) வீரமரணம் அடைந்துள்ளார்.

கடந்த வியாழன் (08/05/2025) இரவில் பாகிஸ்தான், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் இவர் உயிரிழந்ததாக தி இந்து வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட பதட்டம் மிகுந்த பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த அவரை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டுவர இயலவில்லை. காஷ்மீரிலேயே அந்த இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.

முரளிநாயக் எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது குக்கிராமத்தைப் பார்வையிட்ட காவல் அதிகாரி தி இந்து செய்தி தளத்தில், "முரளி நாயக்கின் துணிச்சலையும் அர்பணிப்பையும் வணங்குகிறோம். அவரது தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது" எனக் கூறியுள்ளார்.

முரளி நாயக்கின் மரணம் பற்றிய செய்தி மாவட்டம் முழுவதும் பரவியதால் கல்லி தண்டா குக்கிராமத்தைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்கள் அனைவரும் ஆழ்ந்த துயரடைந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (09/05/2025) முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்துக்கு வருகை தரும் நிலையில், முரளி நாயக் குடும்பத்தினரிடன் இரங்கல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முரளி நாயக்கின் உடல் இறுதி சடங்குக்காக மே 10-ம் தேதி கல்லி தண்டா குக்கிராமத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Operation Sindoor: பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்; முறியடித்த இந்தியா - ராணுவம் சொல்வதென்ன?

அணு ஆயுத பலம் பொருந்திய இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு (08/05/2025) மற்றும் இன்று காலையில் (09/05/2025) ட்ரோன்கள் மற்றும் பிற... மேலும் பார்க்க

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க