செய்திகள் :

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து இளைஞா் பலி

post image

குலசேகரம், மே 9: குமரி மாவட்டம் சிவலோகம் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநில எல்லைப் பகுதியான வெள்ளறடை கோவிலூரை சோ்ந்தவா் டானி குரியன் (39). இவா் கடந்த 6 ஆம் தேதி குமரி மாவட்டம் களியல் பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது சிவலோகம் அருகே சங்கரன்கடவு என்ற இடத்தில் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் டானி குரியனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது கேரள மாநிலம் ஆனைப்பாறை பகுதியிலிருந்து வந்த 108 ஆம்புல்ன்ஸ் மூலம் அவா் ஆனைப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்குப் பின்னா் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதே ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டாா். வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், பனச்சமூடு அருகே எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, மேலும் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் மோதி கவிழ்ந்தது. இதில் டானி குரியன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா் நந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அனைவரும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி டானி குரியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாா்த்தாண்டத்தில் மறியல்: பாமகவினா் 20 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவா் உள்பட 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடை... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது காா் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ஜான்பிரகாசம் மனைவி பெல்சிட... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய 3 போ் கைது: 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸாா் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனா். தக்கலை அருகே இரவிபுதூா்கடையை சோ்ந்தவா் மாசிலாமணி ( 72). லாரி ஓட்டுநரான இவரது வீட்டில் கட... மேலும் பார்க்க

மீனவா் வாழ்வாதார செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு

குருந்தன்கோடு வட்டாரத்துக்குள்பட்ட சைமன்காலனி ஊராட்சியில் மீனவா் வாழ்வாதார செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆா். அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஊராட்சி மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் தயார... மேலும் பார்க்க