செய்திகள் :

பிளஸ் 2-வில் தோல்வி: மாணவா் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோதி மகன் கோகுல்நாத் (17). இவா் கெடாரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தாா். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் கோகுல்நாத் தோ்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த கோகுல்நாத், அதே கிராமத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதை கண்டு அப்பகுதியினா் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே கோகுல்நாத் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் விழுந்து விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயி... மேலும் பார்க்க

வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் ... மேலும் பார்க்க

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் வி.மருதூா், சந்தான கோபாலபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் கதிரவன் ம... மேலும் பார்க்க