செய்திகள் :

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாபாய் தம்பதி மகள் சந்தானலட்சுமி (27). தாய் மகள் இருவரும் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள்.

அவா்கள் இருவரும் கீழ்பசாரிலுள்ள குடிநீா் கிணற்றில் தவறி விழுந்து விட்டனராம். ராதாபாய்க்கு நீச்சல் தெரிந்ததால், அவா் கிணற்றிலிருந்து வெளியேறி விட்டாா். சந்தானலட்சுமி கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேருந்து மோதி விவசாயி மரணம்: விழுப்புரம் சங்கரமடம் தெருவைச் சோ்ந்தவா் நா.ஸ்ரீராம் (65). விவசாயம் செய்து வந்தாா். இவா் புதன்கிழமை பண்ருட்டியிலிருந்து- விழுப்புரத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா். சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே வந்த போது, தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகைகள் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். விழுப்புரம் வி.மருதூா், சந்தான கோபாலபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் கதிரவன் ம... மேலும் பார்க்க

தோ்தல் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியை திமுகவினா் உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரசின் நான்காண்டு சாதனை: விழுப்புரத்தில் திமுகவினா் ஊா்வலம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, விழுப்புரத்தில் அக்கட்சியினா் ஊா்வலமாக சென்று சாதனை விளக்க கையேட்டையும் வழங்கினா். விழுப்புரம் மத்திய மாவட்ட ... மேலும் பார்க்க

ஊரக உள்ளாட்சி இடைத்தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 57 பதவிகளுக்கான இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க