செய்திகள் :

புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!

post image

கத்தோலிக்கத் திருச்சபையில் மதகுருவாக புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், அந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் இன்று இரவு புதிய போப் தேர்வு செய்யப்பட்டு புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் இதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.

எனினும், இந்தக் கூட்டத்தில் புதிய போப் ஆண்டவர் தோ்ந்தெடுக்கப்பட்டார். வெளியே காத்திருந்த மக்களுக்கு இதை உணர்த்துவதற்காக பாரம்பரிய முறைப்படி தேவாலயத்தின் புகைப்போக்கியின் வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது.

அதன்படி, புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் அறிவித்தது. ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். இதன் அடையாளமாக அங்குள்ள புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது. அதைக் கண்ட அங்கு குழுமியிருந்த ஏராளமான மக்கள் ஆரவாரம் செய்தனர். 

அதன்படி புதிய போப்பாக 69 வயதான ராபர்ட் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மக்கள் முன் தோன்றினார்.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவரான ராபர்ட் ப்ரெவோஸ்ட், பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர். இதில், சிறப்பம்சமாக போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி பதினான்காம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது ப... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில... மேலும் பார்க்க

தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!

வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற ... மேலும் பார்க்க

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9... மேலும் பார்க்க

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரண... மேலும் பார்க்க