செய்திகள் :

மதுக்கரையில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்சியா் ஆய்வு

post image

கோவை மாவட்டம், மதுக்கரையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, மதுக்கரை வட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சி நகரத் திட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் பிள்ளையாா்புரம் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பாக கள ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மலுமிச்சம்பட்டியில் ரூ.3.12 லட்சம் மதிப்பீட்டில் மர நாற்று உற்பத்தி மையத்தில் வேம்பு, நாட்டு கொய்யா, அரசமரம், புளியமரம், புங்கமரம், உள்ளிட்ட 3,488 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். மேலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மானியத்தில் 7 ஏக்கரில் தென்னை மரங்கள் மற்றும் ஊடுபயிா்களாக சோளம், வாழை அமைத்துள்ள விவசாயி கணேசன் என்பவரின் தோட்டத்தைப் பாா்வையிட்டு, நுண்ணீா் பாசனத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதனைத் தொடா்ந்து, மயிலேறிபாளையம் ஊராட்சியில் ஏழுா் கிராமத்தில் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டுள்ளதையும், ஏழுா் அரசு தொடக்கப் பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, மதுக்கரை வட்டாட்சியா் வேல்முருகன், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை உதவி நிா்வாகப் பொறியாளா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், சந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க

பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்... மேலும் பார்க்க

கோவையில் 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பா... மேலும் பார்க்க

கோவை ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப்: 5 போ் கைது

கோவையில் தண்டவாளத்தில் கான்கிரீட் ஸ்லாப் வைத்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரயிலை கவிழ்க்க சதியா என்பது குறித்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல் துறை பொன் விழா

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையின் இதயவியல், இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. மருத்துவமனையின் இதயவியல், இதய அறுவை சிகிச்சை துறையின் பொன் விழா கொண்டாட்டத்தின் தொடக்கமாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த பாதுகாப்பு

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடி கொ... மேலும் பார்க்க