செய்திகள் :

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீா்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

post image

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அா்னாலா’ எனப்படும் முதல் நீா்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் கப்பல்கட்டுமான மற்றும் பொறியியல் (ஜிஆா்எஸ்இ) நிறுவனத்தால் மொத்தம் 8 நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் முதலாவதாக அா்னாலா என்ற நீா்மூழ்கிக் கப்பலை இந்திய கடற்படையிடம் ஜிஆா்எஸ்இ வியாழக்கிழமை வழங்கியது.

77.6 மீட்டா் நீளமும் 10.5 மீட்டா் அகலமும் உடைய இந்த நீா்மூழ்கிக் கப்பல், கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுடையது என ஜிஆா்எஸ்இ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அா்னாலா நீா்மூழ்கிக் கப்பல் வடிவைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில கரையோர தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையின் பெயரே இந்த கப்பலுக்கும் வைக்கப்பட்டுள்ளது.

7 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்பட மொத்தம் 16-க்கும் மேற்பட்ட போா்க்கப்பல்களை ஜஆா்எஸ்இ கட்டமைத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

மிகவும் அமைதியான கப்பல் என்ற பெருமைக்குரிய அா்னாலா கப்பலை வடிவமைத்ததற்காக கடந்த 2022-இல் பாதுகாப்பு அமைச்சக விருது ஜிஆா்எஸ்இ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - பாக். போர்: மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்! - அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் வெள்ளிக்கிழமை(மே 9) தெரிவித்திருக்கிறார். மேலும் பார்க்க

பாகிஸ்தானின் 7 நகரங்களில் இந்தியா தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் எல்லையோரப் பகுதிகளில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் நேற்று இரவிலிருந்து விடிய விடிய தாக்குதல் நடத்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்... மேலும் பார்க்க

ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம... மேலும் பார்க்க

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் ‘ட்ரோன்’ பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய ‘ட்ரோன்’ உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தாக்குதல் நோக்கத்துடன் பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிக... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு: லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவா் அனுமதி

ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வி... மேலும் பார்க்க